•~கசப்பின் சங்கீதம் ~•
அடிவயிற்றிலிருந்து
எழுகின்றது குரல்
கண்கள் பார்ப்பது
அலட்சியத்துக்காக
முதற்பொறி பற்றும் வரைக்கும்
ஓங்கி உயர்ந்து
சுருதிகளை மாற்றி மாற்றி
தாக்கும் அக்குரல்
பசியைத் தீண்டியதும்
குளிர்ந்தமர்கிறது
அதற்குப் பிறகு
நாவுகளின் கச்சேரி
சுவைகளின் நடனம்தான்
பெட்டியிலிருந்து
பெட்டிக்கு மாறும் போதே
பிடிக்கும் காவலர்
ஊதும் விசிலில்
தீராது வழிகிறது
கசப்பின் சங்கீதம்.
Comments
Post a Comment