அணுக்கத்தில் இன்னும்
அணுக்கத்தில்
எழுதவேண்டியது எல்லாமும்
நழுவிக் கொண்டே இருக்கின்றன
பால்வழி திசையேகுதலில்
சுடரொழியும் விண்மீன்களாய்.
அணுக்கத்தை வெறுத்து
வெளியில்
அகத்தனிமையை ஏற்றும் போதெல்லாம்
எழுதுகிறேன்
இன்னும்
எழுதுகிறேன்
கடற்கரை மணற்துகள்
ஒவ்வொன்றுக்கும்
செல்லப்பெயர் வைப்பதாய்.
Comments
Post a Comment