எப்படி நிகழ்ந்தது கொலை ?


 



எந்த பாகத்தை அறுத்தாலும் 

விடையின்றியே திறந்தது 


ஓங்கிய உயரத்தை 

உருவான விசையை 

சொருகிய துல்லியத்தை 

பாய்ந்தோடிய குருதியை 

தனித்தனியே பகுத்து 

அட்டவணைப்படுத்தினார்கள். 


எப்படிக்  கொன்றாய் ?

கொல்லும் கணம் 

எங்கிருந்து 

பாய்ந்து வந்து 

இயக்கியது ? 

தீராத கேள்விகளால் 

மீளவும் அறுத்தார்கள்.


கொல்லப்பட்டவன்

அமைதியாக இருந்தான். 


கொன்றவன் 

" கொல்" என்றான்.

Comments