எப்படி நிகழ்ந்தது கொலை ?
எந்த பாகத்தை அறுத்தாலும்
விடையின்றியே திறந்தது
ஓங்கிய உயரத்தை
உருவான விசையை
சொருகிய துல்லியத்தை
பாய்ந்தோடிய குருதியை
தனித்தனியே பகுத்து
அட்டவணைப்படுத்தினார்கள்.
எப்படிக் கொன்றாய் ?
கொல்லும் கணம்
எங்கிருந்து
பாய்ந்து வந்து
இயக்கியது ?
தீராத கேள்விகளால்
மீளவும் அறுத்தார்கள்.
கொல்லப்பட்டவன்
அமைதியாக இருந்தான்.
கொன்றவன்
" கொல்" என்றான்.
Comments
Post a Comment