கனவில் விழாது தாங்கும் குரல்

 




நீர்ப்பானையின் சில்லுகள்

சிதறியிருக்கும்  மரத்தடியில் 

குரல்வளையை இறுக்குகின்றன

முடிவற்று நீளும் விழுதுகள் 

அவிழ்க்க முடியாமல் கதறுகிறேன் 

பாதங்களைத் தாங்குகிறாய் 

கனவுக்கொள்ளியின் தீயா 

இப்படி குளிர்கிறது அம்மா ? 

நடுக்கத்தில் துள்ளும் உடலை 

பிடித்துத் திண்ணக் காத்திருக்கிறது 

ஆதிகாலத்திலிருந்து 

துரத்தும் மாவிலங்கு 

முதற்கடியில் எடுத்துச் செல்கிறது 

முகத்தின் கனிந்த சதையை 

கொட்டும் குருதியில் 

அம்மா ! 

அம்மா ! 

அம்மா ! 

திசைவெளியில் உதிக்கிறது ஒரே குரல் 

அழுகின்ற மாவிலங்கின் தலையில் 

எரிந்து விழுகின்றன 

பொல்லா விழுதுகளனைத்தும் 

முகத்தைப் பொருத்தி 

முத்தமிடுகிறாய் 

பூமியின் ஆழத்தில் 

புன்னகையுடன் ஒளிகிறது 

கனவில் விழாது தாங்கும் குரல். 

Comments