நாளாம் நாளாம்
குலவையொலி கேட்கிறது
எங்கேயோ ஒரு ஊரில்
கோவில் திருவிழா.
வைத்தியக் குறிப்பின் அடிவருடுகிறது
நம்பிக்கை வாசகம்.
பலன்களில் அபாயமேதுமில்லை
எங்களின் ராசிகளுக்கு.
இன்னாரின் பிறந்தநாளோ
இன்னாரின் இறந்தநாளோ
ஒவ்வொரு நாளிலும் தோன்றும்.
நல்ல நேரம் எமகண்டம் ராகுகாலம்
ஒன்றுகூடிக் கலந்திருக்கிறது
அகாலத்தில்.
எவ்வளவு சுலபமாகக்
கிழித்து விடுகிறேன்
ஒரு நாளை
அது கூட்டும் எடையைத்
தாங்க முடியாமல்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
உள்ளங்கை.


Comments
Post a Comment